முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 10:28 AM GMT)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலன் துறை சார்பில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், நில அளவீடுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 16 மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக 2 பயனாளிகளுக்கு கல்வி உதவிதொகை மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ஆயிஷாபேகம், 26 முன்னாள் படைவீரர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story