அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு


அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 3:45 PM GMT (Updated: 12 Oct 2023 3:45 PM GMT)

சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நடந்தது.

சென்னை

சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1971-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து முடித்த (தற்போதைய எஸ்.எஸ்.எல்.சி. தரம்) முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நங்கநல்லூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அப்போது 11-ம் வகுப்பு படித்த 23 பேர் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இருந்து கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்களை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அப்போது பட்டப்பெயர் வைத்து அழைத்த நண்பர்களை அதேபோல் அழைத்து தங்களுடைய பசுமையான நினைவுகளையும், அனுபவங்களையும் அசைபோட்டபடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் எதிர்காலத்தில் சமூகத்துக்கும், தாங்கள் படித்த பள்ளிக்கும் ஏதாவது ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பை செலுத்துவது என்ற முடிவை இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எடுத்தனர்.


Next Story