கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு


கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2023 11:00 PM GMT (Updated: 24 Sep 2023 6:29 PM GMT)

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேனி

கும்பக்கரை அருவி

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு இடையே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கும்பக்கரை அருவியில் நீராடி செல்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குளிக்க தடை நீடிப்பு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் நேற்று 6-வது நாளாக அருவியில் குளிக்க தடை நீடித்தது. இதனால் அருவிக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் பலரும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும்" என்றனர்.


Related Tags :
Next Story