விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

திருவேங்கடம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா அ.கரிசல்குளம் பஞ்சாயத்து ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது 58). இவர் ஆடு, மாடுகள் வைத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடுகளின் தீவனத்துக்காக வாங்கி வைத்திருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பால்சாமி கடந்த சில நாட்களாக சாப்பிட மறுத்து மிகுந்த கவலையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பால்சாமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story