மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
x

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் அருகே உள்ள வாங்கபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45), விவசாயி. இவருக்கு மாரியம்மாள் (38) என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கந்தசாமிக்கு அவ்வப்போது காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் காதுவலி சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த கந்தசாமி மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story