வைக்கோல் படப்பில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


வைக்கோல் படப்பில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
x

களக்காடு அருகே வைக்கோல் படப்பில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே கீழ உப்பூரணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 66). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வைக்கோல் படப்பின் மீது ஏறி நின்று, அதனை தார்ப்பாயால் மூட முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வைக்கோல் படப்பில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story