மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
x

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது72). விவசாயி. இவர் திருப்பெயர் சாலையில் உள்ள தனது வயல்காட்டிற்கு சென்றார். அப்போது தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்சார மோட்டாரை இயக்கியபோது, மின்சார வயரில் தவறுதலாக கைப்பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுந்தர்ராஜ் பலியானார். அந்த வழியே வயல்காட்டிற்கு சென்ற கிராம மக்கள் சுந்தர்ராஜ் மின்சாரம் பாய்ந்து பலியாகி கீழே கிடந்துள்ளதை பார்த்துவிட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story