கார் மோதி விவசாயி பலி; மகன் படுகாயம்


கார் மோதி விவசாயி பலி; மகன் படுகாயம்
x

கார் மோதி விவசாயி உயிரிழந்தார். மகன் படுகாயமடைந்தான்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த முருகையனின் மகன் செந்தில்குமார்(வயது 35). விவசாயி. இவர் நேற்று தனது மகன் பாலமுருகனுடன்(6) அருகில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டு இருந்த மாட்டை ஓட்டுவதற்காக வீட்டில் இருந்து திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த பாலமுருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story