வாகனம் மோதி விவசாயி பலி


வாகனம் மோதி விவசாயி பலி
x

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார்.

திருச்சி

திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள தில்லம்பட்டியைச் சேர்ந்தவர் பழனி (வயது 48). விவசாயியான இவர் நேற்று தில்லம்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story