விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2023 7:45 PM GMT (Updated: 26 July 2023 7:45 PM GMT)

சாணார்பட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடையை சேர்ந்தவர் செல்லையா (வயது 65). விவசாயி. இவரது மனைவி பாத்திமாமேரி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த செல்லையா துக்கம் தாங்காமல் கடந்த 21-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லையா உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story