விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:43 PM GMT (Updated: 25 Jan 2023 9:59 AM GMT)

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story