பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் அரிஜனதெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி வனிதா (வயது 23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து தினேஷ்குமார் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 25-ந்தேதியன்று வனிதா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக மாமனார் பிச்சைமுத்துவிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் வனிதா கிடைக்கவில்லை. இது குறித்து பிச்சைமுத்து கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story