திண்டிவனம் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை


திண்டிவனம் அருகே  குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை
x

திண்டிவனம் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வசந்தா (வயது 50). இவர் கடந்த 24-ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டார்.

அவரை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story