பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

ரெட்டியார்சத்திரம் அருகே, குடும்ப பிரச்சினையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொல்லம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன். அவருடைய மனைவி பஞ்சம்மாள் (வயது 55). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பஞ்சம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story