பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கொத்தனார். இவரது மனைவி மீனா (வயது 25). நேற்று முன்தினம் மாலை பெரியசாமி வீட்டிற்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மீனா பக்கத்து வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story