வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் பூக்குழி திருவிழா


வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
x

வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்வியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பறவை காவடி, வேல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். பின்னர் நேற்று மாலை பூச்செரிதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பட்டினை முதுகுளத்தூர், மு.தூரி செல்வநாயகபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் முதுகுளத்தூர் கடலாடி, கமுதி, சாயல்குடி ஆகிய பகுதியிலிருந்து 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.



Next Story