தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 6:45 PM GMT)

கீழ்வேளூர் அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எப்படி அணைப்பது, தீயின் வகைகள், தீயணைப்பு கருவியை பயன்படுத்தும் விதம், தீ விபத்து ஏற்படும் போது ஆஸ்பத்திரியில் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் எப்படி நடந்து கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் சுப்பையன், சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜ சோழன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story