பட்டாசு தொழிலாளி திடீர் சாவு


பட்டாசு தொழிலாளி திடீர் சாவு
x

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளி திடீெரன இறந்தார்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியை சேர்ந்தவர் தெய்வகனி (வயது 45). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் இவர் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து இவருடைய மனைவி சங்கரேஸ்வரி மற்றும் உறவினர்கள் தெய்வகனியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story