வெளிமாநில தொழிலாளி திடீர் சாவு


வெளிமாநில தொழிலாளி திடீர் சாவு
x

தாயில்பட்டியில் வெளிமாநில தொழிலாளி திடீரென இறந்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் அசாம் மாநிலம் தமுல்பூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி முண்டா (வயது 45) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இரவு தூங்க சென்றவர் காலையில் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. உடனே சக தொழிலாளர்கள் சந்தேகத்தின் பேரில் எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story