கார்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்


கார்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
x

கார்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரமேஷ்(வயது 37). இவரும், இவரது மனைவி அம்சவேணி(35), குழந்தைகள் யாழினி(8), செழியன்(7) ஆகியோர் காரில் ஒன்றாக ரமேஷ் கார் ஓட்ட அனைவரும் பின்னால் உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி செல்ல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரமேஷின் காரும், எதிரே விருத்தாசலத்தில் இருந்து காரைக்கால் கரி சாம்பல் லோடு ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம்போல் சுக்குநூறாக மாறி உருண்டு ஓடியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அம்சவேணி, யாழினி, செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கியிருந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா பகடப்பாடி ராமர் என்பவரது மகன் கோபியை(39) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story