தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு2,700 டன் ரேஷன் அரிசி ரெயிலில் வந்தது


தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு2,700 டன் ரேஷன் அரிசி ரெயிலில் வந்தது
x

தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,700 டன் ரேஷன் அரிசி ரெயிலில் வந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து நெல், அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 700 டன் அரிசி 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றினர். பிறகு சேமிப்பு கிடங்குகளுக்கு அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.


Related Tags :
Next Story