ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தாயை கொலை செய்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடலூர்

திட்டக்குடி அருகே ராமநத்தம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் மனைவி காந்தி (வயது 59). இவர் கடந்த 11.8.2023 அன்று வயலில் இருந்த போது, அங்கு குடிபோதையில் வந்த அவரது மகன் செல்வக்குமார் (35) என்பவர், அருகில் கிடந்த அன்னக்கூடையால் அடித்துக்கொலை செய்தார். இது பற்றி ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடியான இவர் மீது ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் 3 அடி, தடி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்டகலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், செல்வக்குமாரை ராமநத்தம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story