கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4,500-க்கு விற்பனை


கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4,500-க்கு விற்பனை
x

கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்


கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இந்த வாரம் 10 கிலோ ஆடு ரூ.4,500-விற்பனை ஆனது. இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதால் வியாபாரிகளின் வரத்து குறைந்தாலும் ஆடுகளின்விலை உயர்வில்லை என்று கூறினார்.

திருப்பி ஓட்டி சென்றனர்

ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை திருப்பி கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story