ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை


ராணிப்பேட்டை சந்தையில் ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

ராணிப்பேட்டை சந்தையில் பொங்கலை முன்னிட்டு ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சந்தையில் பொங்கலை முன்னிட்டு ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

வாரச்சந்தை

ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை, தினை வகைகள் என விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

குறிப்பாக ராணிப்பேட்டை ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலமானது. ராணிப்பேட்டையை. சுற்றியுள்ள கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவார்கள். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.

ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை

வழக்கம்போல நேற்று ஆட்டுசந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் மினி லாரி, வேன்களில் அதிகாலையிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,000 வரை விலை போனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10,000 வரையிலும், பெரிய ஆடுகள் அதிகபட்சமாக ரூ.15,000 வரையிலும் விலை போனதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் நேற்று சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை வியாபாரம் நடந்தது. சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானது.


Next Story