திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று காலை 7.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 30) என்ற பயணியின் நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் தான் அணிந்திருந்த உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பேஸ்ட் வடிவிலான ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story