அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி


அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
x

ஆலங்குடி அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை

2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கச்சிரான்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்த் (37). இவர்கள் இருவரும் ஆலங்குடியிலிருந்து திருவரங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

ஆயிப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கிவீசிப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவேல், ஆனந்த் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரெங்கராஜ் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story