கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு


கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு
x

கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கால்நடை பராமரிப்புத் துறையின் தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23-ன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடைகள் காப்பீடு செய்ய 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும், வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

பசுக்கள், எருமைகள் இரண்டரை வயது முதல் 8 வயது வரையிலும், ஆடு 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் அருகாமையிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது

1 More update

Next Story