193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:47 PM GMT)

நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை யொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை யொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை யொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமசபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் 2022-23-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் ஆகியவை குறித்த விவாதங்கள் நடக்கிறது. மேலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதமமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விவாதங்களும் நடைபெறும். எனவே அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story