சாலை விபத்தில் மகன் கண் முன்னே மூதாட்டி பலி


சாலை விபத்தில் மகன் கண் முன்னே மூதாட்டி பலி
x

கரூர் அருகே நடந்த சாலை விபத்தில் மகன் கண் முன்னே மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதில் 2 ேபர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

மூதாட்டி பலி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேலபஞ்சபட்டியை சேர்ந்தவர் திருப்பால் (வயது 42). இவர் தனது தாய் சிவகாமி (67) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். திருப்பால் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். சிவகாமி பின்னால் அமர்ந்து வந்தார்.அப்போது பின்னால் அன்புமணி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், திருப்பால், சிவகாமி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவகாமி சம்பவ இடத்திலேயே தனது மகன் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் திருப்பால் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய அன்புமணி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் படுகாயம்

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயம் அடைந்த திருப்பால், அன்புமணி ஆகியோர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story