மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்


மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்
x

மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட உள்ளது

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையிலும் குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் முகாமிலும் வருகிற 13-ந் தேதி தென்காசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திட்ட இயக்குனர் முன்னிலையிலும் நடத்தப்படும் முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.



Next Story