மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேட்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேட்பு முகாம்
x

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேட்பு முகாம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வேலை வழங்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எளிதான வேலைகளை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இந்த முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story