பெரம்பலூரில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது


பெரம்பலூரில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 13 Feb 2023 8:28 PM GMT (Updated: 14 Feb 2023 10:12 AM GMT)

பெரம்பலூரில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story