ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா, குவா'


ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குவா, குவா
x

வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வேலூர்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 27). இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பகலில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவா் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

டிரைவர் சிலம்பரசன் ஆம்புலன்சை ஓட்டினார். செல்லும் வழியில் செல்விக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் ஜெகன் பிரசவம் பார்த்தார். இதில் செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


Next Story