சுகாதார ஆய்வாளர்கள்-அலுவலர்கள் சங்க கூட்டம்


சுகாதார ஆய்வாளர்கள்-அலுவலர்கள் சங்க கூட்டம்
x

சுகாதார ஆய்வாளர்கள்-அலுவலர்கள் சங்க கூட்டம்

நாகப்பட்டினம்

நாகையில், தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் வரவேற்றார். மாநில தலைவர் செல்வன் பேசினார். இதில் மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநில இணைச் செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் அதிக அளவில் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிவதால் மாவட்டத்தில் மற்ற தாலுகாவில் பணியாற்ற கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்ய வேண்டும். 300 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.


Next Story