நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத்ெ்தாடர்ச்சி மலையடிவார பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினந்ேதாறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நீர்வரத்து சீரானதும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.


Related Tags :
Next Story