செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை


செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
x

செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் வெயில் குறைந்து மேக மூட்டமாக மாறியது. மாலை 4.45 மணிக்கு லேசான மழை தூறியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. 5.30 மணி வரை சுமார் 45 நிமிடம் பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story