அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது ஓசூரில் புகழேந்தி பேட்டி


அ.தி.மு.க. அலுவலகத்துக்கு  எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது  ஓசூரில் புகழேந்தி பேட்டி
x

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது ஓசூரில் புகழேந்தி பேட்டி

கிருஷ்ணகிரி

ஓசூர்:

அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான புகழேந்தி ஓசூரில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது. அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மீண்டும் பெரிய பிரச்சினை உருவாகும்.

சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முதல்-அமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்று நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சி அலுவலகத்திற்கு செல்வது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிரான செயலாகும். சுப்ரீம் கோர்ட்டில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா கட்டிகாத்த அ.தி.மு.க என்ற இயக்கம் யாருடைய சொத்தும் அல்ல. டி.ஜி.பி. மற்றும் போலீசாரை கேவலமாக விமர்சிக்கும் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story