சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?


சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 8:00 AM GMT)

சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

நாகப்பட்டினம்

சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலைக்கருகல் நோய்

வேதாரண்யம் பகுதியில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.

இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே பரவி இலையுறைக்கும் பரவுகின்றது. நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.

தழைச்சத்தை மேலுரமாக இடலாம்

இதனை கட்டுப்படுத்த மேலாண்மை துறையினரால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று, நான்கு முறையாகப்பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும். நோயின் தாக்குதல் அதிகரிக்கும் போது எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மேற்கண்ட முறைகளை பின்பற்றினால் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story