முத்து முனீஸ்வரன் கோவிலில் குடமுழுக்கு


முத்து முனீஸ்வரன் கோவிலில் குடமுழுக்கு
x

முத்து முனீஸ்வரன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது

மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சி முக்கூட்டில் முத்து முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. முன்னதாக 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க விமான கலசங்களை அடைந்தன. பின்னர் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். இதேபோல் கிள்ளியூர் ஊராட்சியில் உள்ள மன்மதன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை கிள்ளியூர் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story