அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை


அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
x

அந்தியூரில் ரூ.3 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,300 வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் கதலி (கிலோ) ரூ.55-க்கும், நேந்திரம் ரூ.30-க்கும், செவ்வாழை (தார்) ஒன்று ரூ.900-க்கும், ரஸ்தாளி ரூ.620-க்கும், தேன்வாழை ரூ.730-க்கும், மொந்தன் ரூ.320-க்கும், ரொபஸ்டா ரூ.300-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 750-க்கு வாழைத்தார் விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story