கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு


கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு
x

போச்சம்பள்ளி அருகே சென்னம்மாள் கோவில் திருவிழா கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி அருகேயுள்ள வண்டிகாரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான நேற்று கொதிக்கும் எண்ணெயில் இருந்து அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயில் இருந்து அதிரசங்களை எடுத்து கூடையில் வைத்தனர். பின்னர் கோவில் பூசாரி அந்த அதிரசங்களை சாமிக்கு படைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story