பெரியகுளத்தில்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பெரியகுளத்தில்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

பெரியகுளத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் மருதைதுரை. இவரது மகள் ஸ்ரீமதி (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவரது பெற்றோர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு சென்றனர். வீட்டில் ஸ்ரீமதி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே அங்கு வந்த அவரது பெற்றோர் ஸ்ரீமதி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். ஸ்ரீமதி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story