ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை


ஸ்ரீமுஷ்ணத்தில்  தச்சு தொழிலாளி மர்ம சாவு  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

ஸ்ரீமுஷ்ணத்தில் தச்சு தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் தட்டார தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் மணிகண்டன். இவர் வடக்கு ரத வீதியில் மர இழைப்பகம் நடத்தி வருகிறார். இவரது கடையின் முன்பு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுபற்றி அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் அவர் திருக்கோவிலூர் அருகில் உள்ள சகடி என்ற கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வந்ததும், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள மர இழைப்பகங்களில் தச்சு தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story