போடியில்பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்


போடியில்பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)
தேனி

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், போடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 65), குலாளர்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (65) வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (62) எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த காந்தி (65) வினோபாஜி காலனியை சேர்ந்த மாரிமுத்து (40) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விடுதி உரிமையாளரான முருகதாஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story