போடியில் விவசாயிக்கு கொலை மிரட்டல்


போடியில் விவசாயிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 4 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 1:53 AM GMT)

போடியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி பரமசிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். போடி பங்கஜம் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 61). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுெதாடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழனிவேல், அவரது மகன்கள் ஆனந்தவேல், சித்தீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து மோகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசில் மோகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பழனிவேல், ஆனந்தவேல், சித்தீஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story