தூத்துக்குடி மாநகராட்சியில், வருகிற 27-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்


தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சியில், வருகிற 27-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புகார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.


Next Story