தூத்துக்குடியில்மீனவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு


தூத்துக்குடியில்மீனவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் மீனவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). மீனவர். இவர் நேற்று முன் தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் அவரது மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து விட்டார்களாம். இந்த சத்தம் கேட்டு எழுந்த பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் தீயை அணைத்தனர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பாத்திமாநகர் பகுதியில் நடந்த 2-வது மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ஆகும். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story