தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் முருகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story