தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது


தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
x

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 டன் 610 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2 டன் 149 கிலோவாக குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.714-க்கும், குறைந்தபட்சமாக ரூ.525-க்கும், சராசரியாக ரூ.668.80-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 37 ஆயிரத்து 609 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.



Next Story