மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

பூவந்தி அருகே உள்ள படமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 38). இவர் தனது மோட்டார்சைக்கிளில் அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவரோடு சிவகங்கையில் இருந்து படமாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நல்லாகுளம் விலக்கு அருகே வரும்போது எதிரே மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி சென்ற கார் அவர்களது மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜேஷ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Related Tags :
Next Story